சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக அதிகமான கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின.
மெல்பர்னில் கொவிட்-19
கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை அதி
கரித்திருப்பதால் இரவுநேர ஊரடங்கும் மேலும் இரண்டு வாரங்
களுக்கு முடக்கநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிட்னியில் கடந்த எட்டு வாரங்களாக முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மூன்றாவது கொவிட்-19 அலையில் அந்நகரம்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவில் மீண்டும் பொருளியல் மந்தநிலை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
சிட்னியில் நேற்று கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக ஏழு பேர் மாண்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிளேடிஸ் பெரேஜிக்லியன் தெரிவித்தார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 478 பேருக்குக்
கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கிருமித்தொற்று தலைதூக்கியதிலிருந்து இதுவே நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பதிவாகியுள்ள ஆக அதிகமான அன்றாடப் பதிவு.

