ராணுவ மீட்பு நியாயமானது: அதிபர் பைடன்

ராணுவ மீட்பு நியாயமானது: அதிபர் பைடன்

2 mins read
34456736-4d59-4679-9caf-c8ef8c1aa513
விமானத்தின் மீது ஏறி காத்திருந்த ஆப்கன் மக்கள். இந்நிலையில் ராணுவத்துக்கு பணியாற்றிய அனைத்து ஆப்கன்காரர்களுக்கும் உதவும் சாத்தியம் இல்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியுள்ளார். படம்: ஏஎஃப்பி -

வாஷிங்­டன்: ஆப்­கா­னிஸ்­தா­னி­ லிருந்து தனது ராணு­வத்தை மீட்­டுக் கொள்­வ­தில் உறு­தி­யாக இருப்­ப­தாக அமெ­ரிக்கா அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.

"இன்­னும் எத்­தனை ராணுவ வீரர்­க­ளின் உயிர்­களை இழப்­பது," என்று அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளார்.

குழப்­ப­மான சூழ்­நி­லை­யில் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெரிக்கா வெளி­யே­று­வ­தால் கடு­மை­யான விமர்­ச­னங்­கள் எழுந்து உள்ளன.

அங்கு போரிட்டு உயி­ரி­ழந்த வீரர்­க­ளின் தியாகம் வீணாகி விட்டதாக விமர்சிக்கப்படுகிறது.

சீனா­வும் அமெ­ரிக்க ராணு வத்தின் செயலைச் சாடி­யி­ருக்­கிறது.

அமெ­ரிக்­க ராணுவம் அவசர மாக வெளியேறுவதால் ஆப்­கா­னிஸ்­தானில் நிலைமை மேலும் மோசமாகும் என்று சீன வெளி­ யு­றவு அமைச்­சர் வாங் யி கூறி­யுள்­ளார். இருந்­தா­லும் இந்த விவ­கா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வு­டன் சேர்ந்து செயல்­படத் தயா­ராக இருப்­ப­தாக அவர் சொன்­னார்.

இந்நிலையில் அமெரிக்க வீரர்­கள் வெளி­யேறுவதை அதி­பர் பைடன் நியாயப்படுத்தியிருக்கிறார்.

இனி ஒரு­போ­தும் இதற்கு நல்ல தருணம் ஏற்படப் போவதில்லை என்றார் அவர்.

சென்ற ஞாயிற்­றுக்கிழமை அன்று ஆப்­கா­னிஸ்­தானை தலிபான் முழுமையாகக் கைப்பற்றியது.

தலை­ந­கர் காபூல் கடை­சி­யாக தலி­பான் வசமானது. ஆப்­கன் அதி­பர் அஷ்­ரஃப் கனி தப்­பி­யோ­டி விட்டார். இதனால் இருபது ஆண்டு கால போர் முடிவுக்கு வந்துள்ளது.

அதி­பர் அஷ்­ரஃப் கனி, கடந்த ஏழு ஆண்­டு­களில் நாட்டின் பாது­காப்பை வலுப்­ப­டுத்­தத் தவ­றி­விட்­டதாகக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே ஆப்கானிஸ்தானி லிருந்து தப்பிச்செல்வதற்காக காபூல் அைனத்­து­லக விமான நிலை­யத்தை நூற்றுக்கணக்கான வர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் அதிகரித்தது.

அமெ­ரிக்க ராணுவ விமா­னம் ஒன்று புறப்­ப­ட்டபோது துரத்திச் சென்ற பலர் விமானத்தில் ஏற முயற்சி செய்தனர். விமா­னம் பறக்­கத் தொடங்­கி­யதும் சிலர் கீழே விழுந்ததால் உயிரிழந்தனர்.

விமான நிலைய ஓடு­த­ளத்­தி­லி­ருந்து பொது­மக்­கள் அகற்றப்பட்டு தூதர்­க­ளை­யும் குடி­மக்­க­ளை­யும் வெளி­யேற்­றும் பணி நேற்று காலை மீண்­டும் தொடங்­கி­யது.

அமெ­ரிக்­கர்­க­ளை­யும் அவர்­க­ளுக்கு பணி­யாற்­றிய ஆப்­கன் நாட்­ட­வர்­க­ளை­யும் வெளி­யேற்றுவ­தில் 2,500க்கும் மேற்­பட்ட அமெ­ரிக்க ராணுவ வீரர்­கள் உதவி வரு­வ­தாக மேஜர் ஜென­ரல் ஹாங்க் டைலரை மேற்­கோள்­காட்டி ஊட­கங்கள் தெரிவித்தன.

அமெ­ரிக்க போலி­சார் துப்­பாக்­கி­யால் சுட்டு கூட்­டத்தை கலைக்க வேண்டியிருந்தது.

விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

அங்கு வர வேண்­டாம் என்று தலி­பா­னுக்கு அமெ­ரிக்க ராணு­வம் முன்னதாக எச்­ச­ரித்திருந்தது.