தைப்பே: தைவான் தாக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான் மாதிரி வீழ்ந்துவிடாது என்று தைவான் பிரதமர் சூ ட்செங்-சாங் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சீனா அந்நாட்டுக்கு அருகே ராணுவப் பயிற்சியை நடத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளது.
அண்டை நாடான சக்தி வாய்ந்த சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் தைவான் பிரதமர் பேசி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீட்டுக் கொள்ளப் பட்டதால் அந்நாட்டின் அரசாங்கம் வீழ்ந்தது. இதேபோல நிலைமை தைவானுக்கும் ஏற்பட்டு சீனா படையெடுத்தால் தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா வருமா என்று விவாதம் தைவானில் கிளம்பியுள்ளது. எதிரி நாட்டில் நுழைந்தால் ஆப்கானிஸ்தானைப்போல தைவானிலும் அதிபர் அல்லது பிரதமர் தப்பியோடி விடுவார்களா என்று கேட்டதற்கு, 1949 முதல் 1987 வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சியில் தைவான் மக்கள் உயிருக்கு அஞ்ச வில்லை என்று திரு சூ கூறினார்.
அதுபோல, தற்போது தைவானை விழுங்க விரும்பும் சக்திவாய்ந்த நாடுகளால் மக்கள் அஞ்ச மாட் டார்கள் என்றார் அவர்.
"நாங்கள் நாட்டையும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும். எதிரி களின் பெருமையைப் பேசும் சிலரைப் போல இருக்கக் கூடாது," என்று திரு சூ மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று அடிக்கடி நினைவுபடுத்தும் சீனா, தை வானுக்கு அருகே தாக்குதல் பயிற்சி மேற்கொள்ள போர் விமானம், நீர் மூழ்கிக்கப்பல், போர்க்கப்பல் ஆகியவற்றை அனுப்பி யிருப்பதாகக் கூறியது. ஆனால் மேல் விவரங்களை சீன ராணுவம் வெளியிடவில்லை.

