மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே, நாட்டை கொவிட்-19 பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க 5,024 டிரில்லியன் பிசோ (S$135 பில்லியன்) மதிப்பில் 2022ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளார் என்று அதிபர் மாளிகை ேபச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார். கொள்ளை நோயால் சரிந்து கிடக்கும் பொருளியலை தூக்கி நிறுத்த பிலிப்பீன்ஸ் அரசாங்கம் போராடி வருகிறது. புதிய உருமாறிய கிருமி அச்சுறுத்தி வருகிறது. வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் சாதனை அளவில் புதிய வரவு செலவுத் திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேச வரவு செலவுத் திட்டம், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.5 விழுக்காடு அதிகம். அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் உத்தேச திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று டுட்டர்ேடயின் பேச்சாளரான ஹேரி ரோக் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

