முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலிபான் படை
காபூல்: தலைநகர் காபூல் கடைசியாக கைப்பற்றப்பட்ட பிறகு, நடந்த முதல் அதிகாரபூர்வ செய்தி யாளர் கூட்டத்தில் அமைதிக்கும் பெண்கள் உரிமைகளுக்கும் தலி பான் படை உத்தரவாதம் அளித்து உள்ளது.
ஆனால் இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு அவை இருக்கும் என்று தலிபான் பேச்சாளர் ஸைபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
தலிபானின் அறிவிப்பு சுருக்கமாக இருந்தாலும் இருபது ஆண்டு களுக்கு முன்பு இருந்த கடுமையான ஆட்சி முறை தற்போது இருக்காது என்பதைக் காட்டியது.
நேற்று முன்தினம் காபூல் அனைத்துலக விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே சமயத்தில் விமானங்களில் ஏறி தப்பிச் செல்ல முயற்சி செய்ததால் குழப்பமும் அமளியும் ஏற்பட்டது. ஓடும் விமானத்தை துரத்திப் பிடித்து ஏறிய சிலர் விமானம் பறக்கத் தொடங்கியதும் கீழே விழுந்து மாண்டனர். இந்தச் சம்பவத்திற்கு பிறகு விமான நிலையம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அமெரிக் காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களுடைய தூதர்களையும் வீரர்களையும் வெளியேற்றி வருகின்றன.
இந்த நிலையில் தலிபான் படையினரின் மென்மையான போக்கு வெளிப்பட்டுள்ளது.
1996 முதல் 2001 வரை ஆட்சி செய்தபோது இஸ்லாமிய சட்டத்தை தீவிரமாக அமலாக்கிய தலிபான் படையினர், பெண்கள் வேலைக்குச் செல்லத் தடை விதித்தனர். மீறுவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது பெண்கள் பள்ளிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பெண்கள் வெளியே செல்லும்போது முழுமையாக மூடப்பட்ட உடையை அணிந்திருக்க வேண்டும்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய பேச்சாளர், "எங்களுக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இனி விரோதிகள் வேண்டாம்." என்றார்.
"பெண்கள் வேலைக்கும் பள்ளிக்கும் செல்ல அனுமதிப்போம். ஒரு துடிப்பான சமூகமாக இருக்கும். ஆனால் இஸ்லாமிய கட்டமைப்புக்கு உட்பட்டிருக்கும்," என்று ஸைபிஹுல்லா முஜாஹித் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதத் தில் நியூயார்க்கில் பேசிய ஐநா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், என்ன நடக்கிறது, உறுதிமொழி நிறை வேற்றப்படுகிறதா என்பதை பொறுத் திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் ஆட்சியை தலிபான் கைப்பற்றியிருப் பதால் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கறை எழுந்துள்ளது.
இது பற்றி ஆலோசனை நடத்த அடுத்த வாரம் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் நடைபெறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம், பெண்கள் உட்பட அடிப்படை உரிமைகளை மதித்து நடந்தால் மட்டுமே தலி பானுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

