புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 22,242 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,466,512ஐ எட்டியுள்ளது என்று சுகாதாரத் துறை தலைவர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
சிலாங்கூரில் மட்டும் புதிதாக 6,858 பேர் பாதிக்கப்பட்டனர் என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அடுத்தபடியாக சாபாவில் 2,413 பேரும் பினாங்கில் 1,867 பேரும் கெடாவில் 1,852 பேரும் பாதிக்கப்பட்டனர். கோலாலம்பூரில் நேற்று ஒரே நாளில் 1,587 பேரும் ஜோகூரில் 1,477 பேரும் தொற்றுக்கு ஆளாகினர்.
இதற்கிடையே மலேசியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் எண்பது பேர் தொற்றுக்குப் பலியாகினர் என்று டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் தெரி வித்தார்.
"அண்மைய மருந்தியல் தரவுகளை ஆராய்ந்ததில் பதிவான 12,993 மரணங்களில் எண்பது பேர் ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டவர்கள், நான்கு பேர் இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்கள்," என்று அவர் கூறினார்.
கிள்ளான், ஜோகூர், பினாங்கு மற்றும் சரவாக் எல்லைகளுக்கு அப்பால் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசிக்குப் பிந்திய தரவுகள் ஆராயப் படுகின்றன. குறிப்பாக 'டெல்டா' கிருமி தொடர்ந்து உருமாறி வருவதால் தடுப்பூசிகளின் ஆற்றல் பற்றி கேள்வியெழுந்துள்ளது.
மலேசியாவில் மாறுபட்டு வரும் டெல்டா மற்றும் இதர உருமாறிய கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பதை முடிவு செய்ய இந்தத் தரவுகள் மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மலே சியாவில் திடீரென தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன.

