ஹாங்காங்: ஹாங்காங் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு உறுப்பினர்களை தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டிய பாதுகாப்புத் தலைவர், 'சட்டத்தை மதிக்கும் கலாசாரத்தை' நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்றார்.
பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக 18 முதல் 20 வயது வரையிலான மாணவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலிஸ் படைத் தலைவரான மூத்த சூப்பிரிடென்டண்ட் ஸ்டீவ் லி கூறினார்.
காவல்துறை அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தியவருக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை மாணவர்கள் நிறைவேற்றியதால் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்து உள்ளது.

