மலேசியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சம்

மலேசியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சம்

1 mins read
6f5db552-a883-4583-bc10-1aa3a649a779
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் புதி­தாக 22,948 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அந்­நாட்­டில் இது­வரை ஒரு நாளைக்கு இவ்வளவு பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது இதுவே முதல் முறை.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் பதவி வில­கி­னார். தற்போது அவர் இடைக்காலப் பிரதமராக இருக்கிறார்.

நாடா­ளு­மன்­றத்­தில் தமக்கு இருந்த அறுதிப் பெரும்­பான்மை ஆத­ரவை அவர் இழந்­தார்.

திரு முகைதீனின் அரசாங்கம் கிருமிப் பரவலைச் சரியாகக் கட்டுப்படுத்தவில்லை எனப் பல தரப்பினர் அவரை சாடியுள்ளனர்.

கடந்த சில மாதங்­க­ளாக மலே­சி­யா­வில் புதி­த­ாகத் தொற்று ஏற்­பட்­டோர், அத­னால் மாண்­டோர் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக்­கொண்டே வந்­துள்­ளது.

மலே­சி­யா­வில் இது­வரை மொத்­த­மாக சுமார் 1,489,460 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

அதன் மாநி­லங்­களில் சிலாங்­கூ­ரில்­தான் ஆக அதி­க­மானோருக்­குத் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு அடுத்­த­ப­டி­யாக சாபா, கெடா ஆகிய மாநிலங்கள் அதி­க­மா­கப் பதிக்­கப்­பட்டுள்­ளன.