சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு நாளைக்கு இதுவரை இல்லாத அளவில் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸில் மட்டும் புதிதாக 681 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு வீட்டில் இருக்கும்படி கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை நன்கு பலனளித்தது.
ஆனால் இப்போது டெல்டா வகை கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அந்த அணுகுமுறை வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் எண்ணுகின்றனர்.
டெல்டா வகை கிருமியைச் சகித்துக்கொண்டு வாழ எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸின் முதலமைச்சர் கிலேடிஸ் பெரெட்ஜிக்லியன் கூறினார்.
மற்ற மாநிலங்களுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் இதை உணர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முடக்கநிலையைக் கட்டங்கட்டமாகத் தளர்த்த கூடுதலானோருக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என்று அவர் கூறினார்.
நியூ சவுத் வேல்ஸின் தலைநகர் சிட்னியில் கிருமிப் பரவல் மோசமாக இருந்துவந்துள்ளது.
இப்போது அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் இதர பகுதிகளுக்கும் கொவிட்-19 பரவிவருகிறது.
விக்டோரியா மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமானது.
நேற்றைய நிலவரப்படி அங்கு 57 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

