அலோர் ஸ்டார்: கனத்த மழையால் மலேசியாவின் கெடா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது மூவர் மாண்டனர். குறைந்தது நால்வரைக் காணவில்லை.
யான், கோலா முடா, பண்டார் பஹாரு ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இதனால் தனிமைப்படுத்தப்பட்ட கொவிட்-19 நோயாளிகள் சிலரும் வெளியேற்றப்பட்டனர்.

