பேங்காக்: கொவிட்-19 கிருமித்தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்படாத நோயாளிகளுக்கு மூலிகை மருந்தைக் கொண்டு சிகிச்சையளிக்கும் முயற்சியில் தாய்லாந்து இறங்கியுள்ளது. ஃபா டலாய் என்றழைக்கப்படும் சுவைப்பதற்குக் கசப்பாக இருக்கும் இந்த மூலிகை, உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எனச் சொல்லப்படுகிறது.
தாய்லாந்தில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானோருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதோடு, கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அந்நாட்டின் மருத்துவத் துறை பெரிதும் சிரமப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மூலிகைத் தீர்வின் பக்கம் அந்நாட்டின் கவனம் திரும்பியுள்ளது. எனினும், ஃபா டலாய் மருந்தை அதிக அளவில் உட்கொள்ளவேண்டும் என்று மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

