ஜெசிந்தா ஆர்டர்ன்: கிருமித்தொற்று மர்மம் தீர்ந்தது

ஜெசிந்தா ஆர்டர்ன்: கிருமித்தொற்று மர்மம் தீர்ந்தது

1 mins read
194abdad-de96-49e2-b0a6-18632b0d01a9
-

வெல்­லிங்­டன்: நியூ­சி­லாந்­தில் மீண்­டும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று எவ்­வாறு ஏற்­பட்­டது என்ற கேள்விக்­குப் பதில் கிடைத்­து­விட்­ட­தாக அந்­நாட்­டுப் பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டன் கூறி­யுள்­ளார். ஆக்­லாந்­தில் அண்­மை­யில் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

ஆறு மாதங்­களில் முதன்­மு­றை­யாக நியூ­சி­லாந்­தில் ஏற்­பட்ட முதல் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வம் இது.

அவ­ருக்­குத் தொற்­றி­யது ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பர­வி­வ­ரும் டெல்டா வகை கொவிட்-19 கிருமி என்­றும் இம்­மா­தம் ஏழாம் தேதி­யன்று சிட்னி­யி­லி­ருந்து வந்த ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கிருமி பர­வி­ய­தா­க­வும் தெரி­ய­வந்துள்­ளது. முத­லில் அஞ்­சப்­பட்­ட­து­போல் கிருமி, சமூக அள­வில் அதிகம் பரவவில்லை எனத் திரு­வாட்டி ஆர்­டன் கூறி­னார்.

நியூ­சி­லாந்­தில் தற்­போது நடை­முறைப்­டுத்­தப்­பட்­டுள்ள முடக்­க­நிலை இன்று முடி­வுக்கு வர­வுள்­ளது. அதை நீட்­டிப்­பது குறித்து நாளை முடி­வெடுக்­கப்­படும்.