பதவியேற்றார் இஸ்மாயில்

பதவியேற்றார் இஸ்மாயில்

2 mins read
af7ef8a8-dfd6-4e24-b2cd-d4565b3eccfc
மலேசிய மாமன்னரிடமிருந்து பதவி ஆவணங்களைப் பெறும் திரு இஸ்மாயில் சப்ரி. படம்: ஏஎஃப்பி -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் புதிய பிர­த­ம­ராக இஸ்­மா­யில் சப்ரி அதிகா­ர­பூர்­வ­மா­கப் பத­வி­யேற்றுள்ளார். அம்னோ கட்­சி­யின் துணைத் தலை­வ­ரான திரு இஸ்மாயில் மலே­சி­யா­வின் ஒன்பதாவது பிர­த­மராவார்.

ஆளும் கட்­சி­யாக இருந்த அம்னோ 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லில் தோல்­வி­யுற்­றது. சுதந்­தி­ர­ம­டைந்த பிறகு முதன்­மு­றை­யாக அம்னோ தேர்­த­லில் தோல்­வி­யுற்றது.

இப்போது அந்த நிகழ்வுக்கு மூன்றே ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­யிலிருந்து மலே­சியா மீளும் வரை திரு இஸ்­மா­யில், அறு­திப் பெரும்­பான்மை ஆத­ர­வு­டன் 'பெரிக்­கத்­தான் நேஷ­னல்' கூட்­டணி ஆட்சியை வழி­ந­டத்­து­வார். தற்­போது அவ­ருக்கு 220 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் 114 பேரின் ஆத­ரவு உள்­ளது.

சென்ற ஆண்டு தொடக்கத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

அத­னைத் தொடர்ந்து மலே­சியா­அர­சி­யல் நிலைத்­தன்­மையை இழந்தது.

'பெரிக்­கத்­தான் நேஷ­னல்' கூட்டணி­யின் திரு முகை­தீன் யாசின் சென்ற ஆண்டு மார்ச் மாதம் பிர­த­ம­ரா­கப் பத­வி­யேற்­றார். சென்ற வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் தனக்கு இருந்த அறு­திப் பெரும்­பான்மை ஆத­ரவை அவர் இழந்­தார். அதற்­குப் பிறகு அவர் ஐந்து நாட்களுக்குத் தற்­கா­லி­கப் பிரதமராகப் பதவி வகித்­தார். அதன் பின்­னர் நேற்று திரு இஸ்­மா­யில் பிர­த­ம­ரா­கப் பத­வி­யேற்­றார்.

மலேசிய வரலாற்றில் ஆகக் குறுகிய காலத்திற்குப் பிரதமராகப் பதவி வகித்த திரு முகைதீன், தான் ஆட்சி செய்த விதத்தைத் தற்காத்துப் பேசியுள்ளா்.

கொவிட்-19 சூழல், முடக்­க­நிலை­யால் பொரு­ளி­ய­லுக்கு வரும் பாதிப்பு இரண்­டை­யும் தம்­மால் முடிந்­த­வரை நன்கு கையாண்­ட­தாகத் திரு முகை­தீன் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு அளித்த நன்றி உரை­யில் குறிப்­பிட்­டார்.

வருங்காலத்தில் மீண்டும் பிரதமராகும் நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் பிரச்­சி­னை­யைத் திரு முகை­தீன் சரி­யா­கக் கையா­ள­வில்லை எனக் குறை­கூ­றப்­பட்­டது. அது­தான் அவர் அறு­திப் பெரும்­பான்மை ஆத­ரவை இழக்­கக் கார­ணம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.