ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

1 mins read
0ce82136-a905-42e3-819a-9efa0036621d
விக்டோரியா மாநிலத்தின் தலைநகர் மெல்பர்னில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள். படம்: இபிஏ -

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி, மெல்­பர்ன் நக­ரங்­களில் முடக்­க­நி­லைக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­களில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கைது­செய்­யப்­பட்டுள்­ள­னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களு­டன் மோதிய காவல்­து­றை­யி­ன­ரில் காய­முற்ற குறைந்­தது ஏழு பேர் மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

விக்­டோ­ரியா மாநி­லத்­தின் தலை­ந­கர் மெல்­பர்­னில் குறைந்­தது 218 பேர் கைது­செய்­யப்­பட்­ட­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரிவித்­த­னர்.

சிட்னி தலை­ந­க­ராக விளங்­கும் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் குறைந்­தது 47 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்டது. பொதுச் சுகா­தார உத்­த­ர­வு­களை மீறி­யது, கைதா­வ­தைத் தவிர்த்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் அவர்­கள் மீது சுமத்­தப்­பட்­டன.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஒரு நாளைக்கு இது­வரை இல்­லாத அள­வில் ஆக அதி­க­மா­னோருக்­குப் புதி­தாக கொவிட்-19 கிருமித்­தொற்று ஏற்­பட்ட நிலை­யில் ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. அந்நாட்டில் 894 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் பெரும்­பாலோர் சிட்னி நகரில் உள்­ள­வர்­கள்.