'வெளியேறினால் போதும்'

'வெளியேறினால் போதும்'

2 mins read
7ecd1c12-7848-462b-8810-66d39584876b
காபூல் விமான நிலையத்தில் நேற்று ஸ்பெயின் ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்ட ஆப்கான் குடிமக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

காபூல்: காபூ­லி­லி­ருந்து வெளி­யேற்­றும் பணி எவ்­வ­ளவு விைரவில் முடி­கி­றதோ அவ்­வ­ளவு நல்­லது என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.

இம்­மா­தம் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்­குள் அனை­வ­ரை­யும் வெளி­யேற்ற வேண்­டும் என்று தலி­பான் படை­யி­னர் காலக்­கெடு விதித்­துள்­ள­னர். இந்­தக் காலக்­கெ­டுவை மீறி­னால் விளை­வு­க­ளைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று அவர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

ஆனால் காலக்­கெ­டுவை நீட்­டிக்க வேண்­டும் என்று பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்­குப் பிற­கும் அமெ­ரிக்­கப் படை­கள் அங்கு தங்­கி­யி­ருந்­தால் வெளி­யேற்­றும் பணி முழு­மை­யாக நிறைவேறும் என்று அவை கூறு­கின்­றன.

ஆனால் தனது திட்­டத்­தில் அதி­பர் பைடன் உறு­தி­யாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அமெ­ரிக்கத் துருப்­பு­கள் ஏற்­கெ­னவே மீட்­டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதனால் மக்களை வெளி ேயற்றும் பணி பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் குறிப் பிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் ஒன்பது நாட்களுக்கு முன்பு தலிபான் படையிடம் வீழ்ந்த பிறகு இதுவரை 70,700 பேர் காபூலிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர்.

"எங்களுடைய மக்கள் வெளி யேற உதவும் நடவடிக்கைகளை தலிபான் எடுத்து வருகிறது," என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

"ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நீண்டநாள் தங்கியிருந்தால் தாக்கப்படும் அபாயமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார் அவர்.

இதற்கிடையே காலக்கெடுவை நீட்டிப்பதில் அமெரிக்க அதிபரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான் சன் தோல்வியடைந்துள்ளார்.

'ஜி7' தொழில்மய நாடுகளின் மாநாடு பிரிட்டன் தலைமையில் நடைபெறுகிறது.

அதன் தலைவர்கள், அமெரிக்க அதிபரை சம்மதிக்க வைப்பதற்காக மெய்நிகர் வழியாக அவசரமாகக் கூடி விவாதித்தனர்.

வெளிநாட்டவர்களையும் பாதிக் கப்படக்கூடிய ஆப்கான் நாட்டவர் களையும் வெளியேற்ற அவகாசம் தேவைப்படுவதாக கூட்டத்தில் பங் கேற்ற நாடுகள் தெரிவித்தன.

ஆனால் ஜோ பைடனிடம் போரிஸ் ஜான்சனின் செல்வாக்கு பலிக்கவில்லை.