பூஸ்டர் தடுப்பூசிக்குத் தயாராகும் சிலாங்கூர்

பூஸ்டர் தடுப்பூசிக்குத் தயாராகும் சிலாங்கூர்

1 mins read
3a17bf0c-1074-49b9-ba4a-a7e0907e6623
-

ஷா ஆலம்: உலக நாடு­கள் கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ராக இரண்டு முறை தடுப்­பூசி போடு­ வ­தில் தீவி­ரம் காட்டி வரும் வேளை­யில் மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநி­லம் கூடு­த­லாக 3வது முறை பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வ­தற்கு ஆயத்­த­மா­கிறது.

செல்­வாக்ஸ் எனும் சிலாங்­கூர் தடுப்­பூ­சித் திட்­டத்­தின் கீழ் பூஸ்­டர் தடுப்­பூசி போடப்­படும் என்று நேற்று அம்­மா­நில சட்­ட­ச­பை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

பதி­னெட்டு வய­துக்­குக் கீழ் உள்­ள­வர்­களையும் உள்ளடக்கி ஆயத்த வேலை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. ஆனால் கொவிட்-19 தடுப்­பூசி விநி­யோக உத்­த­ர­வாத சிறப்­புக் குழு­வின் ஒப்­புதலைப் பெற வேண்­டி­யுள்­ளது என்று சட்­ட­ச­பை­யில் பேசிய சுகா­தார, ஒற்­றுமை, மக­ளிர் மற்­றும் குடும்ப மேம்­பாட்­டுக் குழு­வின் தலை­வ­ரான டாக்­டர் சிட்டி மரியா மஹ்­முட் தெரி­வித்­தார். சட்­ட­ச­பை­யில் உறுப்­பி­னர் ஒரு­வ­ரது கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

இம்­மா­தம் 22ஆம் தேதி வரை செல்­வாக்ஸ் சமூ­கத் திட்­டத்­தின் கீழ் 224,880 தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­ட­தா­க­வும் 275,120 தடுப்­பூ­சி­கள் எஞ்­சி­யி­ருப்­ப­தா­க­வும் டாக்­டர் சிட்டி மரியா ேமலும் தெரி­வித்­தார்.