தைவானில் கிருமிப் பரவல் இல்லை

தைவானில் கிருமிப் பரவல் இல்லை

1 mins read
06083ab3-b9c9-4177-812a-788dbc283c17
-

தைப்பே: தைவா­னில் மே 9ஆம் தேதிக்­குப் பிறகு நேற்று முதல் முறை­யாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் எது­வும் பதி­வா­க­வில்லை என்று அந்­நாட்டு அர­சாங்­கம் தெரி­வித்­தது.

தொற்று அறவே இல்­லாத அல்­லது குறை­வாக உள்ள நாடாக பெயர் பெற்ற தைவா­னில் மே மாதம் மத்­தி­யில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­தது. இதை­ய­டுத்து அர­சாங்­கம் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அம­லாக்­கி­யது. உண­வ­கங்­களில் உண்­ண­வும் ஒன்­று­கூ­ட­வும் அது தடை விதித்­தது.

இவற்­று­டன் தடுப்­பூசி போடு­வ­தும் தீவி­ர­மாக்­கப்­பட்­ட­தால் கிரு­மித் தொற்று கட்­டுக்­குள் வந்­தது.

இதன் கார­ண­மாக முகக்க­வ­சம் அணி­வது உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­கள் கடந்த மாதம் தளர்த்­தப்­பட்­டன.

அதே சம­யத்­தில் நாட்­டுக்­குள் நுழை­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கட்­டுப்­பா­டு­கள் வலுப்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்நிலை­யில் உள்­ளூ­ரில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­ப­டா­த­தால் சுகா­தார அமைச்­சர் சென் ஷிஹ-சுங் மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் நோய்க்கு எதி­ரான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மக்­கள் கைவி­டக் கூடாது என்று அவர் கேட்­டுக்கொண்­டார்.

"வரு­கின்ற இரு வார­மும் கண்­கா­ணிப்­புக் கால­மா­கும். எல்­லா­ரும் பாது­காப்­பாக இருப்­பது அவ­சி­யம்," என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தைவானில் கொள்ளைநோய் பரவத் தொடங்கியதிலிருந்து இது வரை மொத்தம் 15,939 பேர் பாதிக் கப்பட்டனர். 830 பேர் அந்நோயால் உயிரிழந்தனர்.

நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக தைவான் கிருமிப்பரவலை வெற்றி கரமாக கட்டுப்படுத்தியுள்ளது.