அலிபாபா பாலியல் வழக்கில் முதல் சந்தேக நபர் கைது

அலிபாபா பாலியல் வழக்கில் முதல் சந்தேக நபர் கைது

1 mins read
f2691dc0-a157-4a59-b098-8f88eb150b30
-

பெய்­ஜிங்: சீனாவை உலுக்­கிய அலி­பாபா குரூப் ஹோல்­டிங்­சின் முன்­னாள் நிர்­வாகி தொடர்­பான பாலி­யல் வழக்­கில் முதல் முறை­யாக ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து சீனா­வின் தொழில்­நுட்­பத் துறை­யில் பாலி­யல் விவ­கா­ரம் சூடு­பி­டித்­துள்­ளது.

அநா­கரி­க­மாக நடந்­து­கொண்ட சந்­தே­கத்­தின்­பே­ரில் ஜினான் ஹுவா­லி­யன் பேரங்­கா­டி­யில் பணி­யாற்­றிய ஷாங் என்பவரை கைது செய்ய ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­ட­தாக ஜினான் நகர வழக்­க­றி­ஞர்­கள் இணை­யத் தளத்­தில் வெளி­யி­டப்­பட்ட தக­வ­லில் தெரி­வித்­த­னர்.

கடந்த ஜூலை மாதம் அலிபாபா பெண் ஊழியருடன் ஷாங் விருந்தில் பங்கேற்றார். அப்போது தமது முதலாளியால் பாலியல் தொந்தரவு களுக்கு ஆளானதாக பெண் ஊழியர் புகார் செய்திருந்தார்.

பெண் ஊழியரின் புகார் சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த நிர்வாகி வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து பேசிய போலிசார், ஷோவ் என்று அழைக்கப் படும் பெண்ணிடம் அவர் வலுக் கட்டாயமாக அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவித்தனர்.

அந்தப் பெண் அளவுக்கு அதிக மாக குடித்து வாந்தி எடுத்தபோது உடன் சென்ற சந்தேக நபர் அதே குற்றத்தை மீண்டும் புரிந்ததாகவும் போலிசார் கூறினர்.

இந்தச் சம்பவத்தினால் வாடிக் கையாளர்களுடன் சேர்ந்து பெண்கள் மதுபானம் குடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறப் பட்டது.

இதனால் வர்த்தகம் தொடர் பிலான மதுபான விருந்துகளை குறைக்கப்போவதாக சீன கம் யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் அறிவித்தது.