மலேசிய அமைச்சரவை இன்று அறிவிப்பு

மலேசிய அமைச்சரவை இன்று அறிவிப்பு

2 mins read
9083350f-0031-4d81-abcf-df679ab6a560
-

கோலா­லம்­பூர்: புதிய பிர­த­ம­ராக பொறுப்பு ஏற்­றுள்ள இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் இன்று 11.00 மணிக்கு புதிய அமைச்­ச­ரவையை வெளியிடுவார் என்று நேற்று அவ­ரது அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

பாகாங்­கின் குவாந்­தா­னில் நேற்று காலை மாமன்­னரை பிர­த­மர் சந்­தித்­துப் பேசி­னார்.

அப்­போது உத்­தேச அமைச்­சர் ­க­ளின் பட்­டி­யலை அவர் மன்­ன­ரி­டம் ஒப்­ப­டைத்­தார். இதை­ய­டுத்து புதிய அமைச்­ச­ரவை இறுதி செய் ­யப்பட்­ட­தாகத் தெரி­கிறது.

இதன் அடுத்­த­கட்­ட­மாக இன்று புதிய அமைச்­சர்­க­ளின் பட்­டி­யலை பிர­த­மர் வெளி­யி­டு­வார் என்று பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் அறி­விப்பு நேற்று மாலை வெளி­யா­னது.

வரும் திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் 2.30 மணிக்­குத் தொடங்­கும் பதவி­ யேற்பு நிகழ்ச்­சி­யில் அமைச்­சர்­களும் துணை அமைச்­சர்­களும் பத­வி­யேற்­றுக்கொள்­வார்­கள் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

ஏறக்குறைய 22 மாதங்கள் நீடித்த பக்கத்தான் ஹரப்பான், ஆட்சியிலிருந்து இறங்கிய பிறகு முகைதீன் யாசின் தலைமையில் பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

அதுவும் நம்பிக்கை வாக் கெடுப்பில் தோல்வியைத் தழுவ வேண்டியிருக்கும் என்பதால் திரு முகைதீன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த ஆட்சியும் 17 மாதங்களில் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து அம்னோ கட்சி துணைத் தலைவரும் திரு முகை தீன் அரசாங்கத்தில் துணைப் பிரத மராகவும் இருந்த இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை புதிய பிரதமராக மாமன்னர் நியமித்தார்.

புதிய அமைச்சரவையில் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப் படுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் தமது அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கு அவர் துணைப்பிரதமர் பொறுப்பு வழங் கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.