ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பலருக்கு முதல் அல்லது இரண்டாவது தடுப்பூசிக்கே வழியில்லாத நிலையில் சில முக்கிய பிரமுகர்கள் 3வது முறையாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அறிவித்துள்ளதால் அவர்கள் கடுமையான குறைகூறலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
ராணுவத் தளபதி ஹாடி ஜஜான்டோ, கிழக்கு கலிமந்தான் ஆளுநர் இஸ்ரான் நூர் ஆகியோர் அதிபர் ஜோக்கோ விடோடோவைச் சந்தித்தபோது 3வது தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்தனர்.
தற்சமயம் சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே செவ்வாய்க் கிழமை அன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு முன்பு அதிபர் ஜோக்கோ விடோடோ சாதாரண மாக உரையாடிய காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அப்போது அதிபர், தமக்கு 3வது தடுப்பூசி போடவில்லை என்றார்.
பைசர்-பயோஎன்டெக் ஊசிக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் காட்சி பின்னர் அதிகாரபூர்வ ஒளிவழியிலிருந்து அகற்றப்பட்டது.
இந்நிலையில் 3வது தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறப் படுவதை விமானப் படைத் தளபதி மறுத்துள்ளார்.
மூல உயிரணு சிகிச்சைக்காக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவர் விளக்க மளித்தார். ஆளுநர் இஸ்ரான் 3வது தடுப்பூசி போட்டது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அதிபர் மாளிகையும் இது பற்றி பேச மறுத்துவிட்டது.

