ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேர்ந்த குண்டுவெடிப்புகளை சிங்கப்பூர் கண்டித்துள்ளது. “இந்தச் செயல்கள் கண்டிக்கத்தக்கது. அத்துடன் அவற்றை நியாயப்படுத்த முடியாது,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிங்கப்பூர் தனது ஆதரவை வெளிப்படுத்தியது. காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவேண்டும் என்றும் அது அறிவித்தது.
“தலிபான் உட்பட அனைத்துத் தரப்புகளுமே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படி சிங்கப்பூர் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. ஆப்கானிஸ்தானைவிட்டு போக விரும்பும் வெளிநாட்டினர்கள் முறையாக வெளியேறும்படி சிங்கப்பூர் கேட்டுக்கொள்கிறது,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தலிபானின் ஆட்சியில் மீண்டும் வாழ விரும்பாமல் நாட்டைவிட்டு வெளியேற விரும்பிய மக்கள் வியாழக்கிழமையன்று ஹமிட் கர்ஸாய் அனைத்துலக விமான நிலையத்தில் குழுமியிருந்தபோது ஐசிஸ்-கே அவர்களைக் குறிவைத்துத் தாக்கியது.