கோப்பன்ஹேகன்: டென்மார்க்கில் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளும் அகற்றப்படும். அந்நாட்டில் பலருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கொவிட்-19 கிருமியால் இனி அதன் சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்று அதன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டென்மார்க்கில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனினும், மீண்டும் சமுதாயம் இயங்குவதற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கிருமிப் பரவல் உருவெடுத்தால் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் டென்மார்க்கின் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியுனிக்கே குறிப்பிட்டார்.