தோக்கியோ: ஜப்பானில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்ட மொடர்னா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட 30 வயதைத் தாண்டிய இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சில நாள்களுக்குப் பிறகு அவர்கள் மாண்டனர். சில மொடர்னாவின் தடுப்பூசிகளின் குப்பிகள் மாசுபட்டிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து அதன் 1.63 மில்லியன் தடுப்பூசிகளை ஜப்பான் தற்காலிகமாகத் தடை செய்தது.
எனினும், ஆடவர்கள் உயிரிழந்ததற்குத் தடுப்பூசி காரணம் என்பதற்குத் தற்போது ஆதாரம் ஏதும் இல்லை என்று மொடர்னாவும் ஜப்பானில் அதன் தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் டக்கேடா மருந்து நிறுவனமும் கூறின.

