ஆயத்தமாகும் புதிய மலேசிய அமைச்சர்கள்

ஆயத்தமாகும் புதிய மலேசிய அமைச்சர்கள்

1 mins read
5413d94a-379e-4a1e-9fa5-73c07bbd046b
-

கோலா­லம்­பூர்: நாடு மற்­றும் மக்களின் நல­னுக்­கா­கத் தங்­க­ளால் முடிந்­த­தைச் செய்­யப்­போ­வ­தாக மலே­சி­யா­வில் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்­கள் உறு­தி­யளித்­துள்­ள­னர்.

வர்த்­தக, தொழில் மூத்த அமைச்­ச­ரான அஸ்­மின் அலி, திரு இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோ­பைப் பிர­த­ம­ராக்­கி­ய­தற்கு மாமன்­னர் சுல்தான் அப்­துல்லா அக­மது ஷாவிற்­குத் தமது நன்­றி­யைத் தெரிவித்­துக்­கொண்­டார்.

தனக்கு அமைச்­சர் பதவி தந்­த­தற்­குப் பிரதமர் இஸ்­மா­யில் சப்­ரிக்­கும் அவர் நன்றி சொன்­னார்.

நீண்­ட­கா­லம் நிலைத்­தி­ருக்­கும் வகை­யில் மீண்­டு­வந்து பொருளியலைச் சிறப்­பான முறை­யில் வளர வைக்­கத் தாம் கட­மைப்­பட்­டுள்­ள­தாக அவர் சொன்­னார்.

கொவிட்-19 தடுப்பூசியை மக்களுக்கு ஆக வேகமாகப் போடும் உலக நாடுகளில் ஒன்றாக மலேசியா உள்ளது என்று சொன்ன அவர், அது தொடரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

பொரு­ளி­யல் மற்­றும் மக்­கள் நல­னுக்­கா­கத் தாமும் தமது அமைச்­சும் முடிந்­த­தைச் செய்­யப்­போ­வ­தாக மீண்­டும் நிதி­ய­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றி­ருக்­கும் திரு ஸாஃப்ருல் தெங்கு அஸிஸ் கூறி­னார்.

இவர்­க­ளைப் போல் இதர அமைச்­சர்­களும் தங்­க­ளின் நன்றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­ட­னர்.

இதற்கிடையே, பிரதமராகப் பதவியேற்ற பிறகு திரு இஸ்மாயில் சப்ரி முதன்முறையாகத் தமது தொகுதியான பெராவிற்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.

அதற்கு முன் அவர் தமது பெற்றோரின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.