மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா இருக்கும் வட்டாரத்தில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டில் நேற்று புதிதாக 19,441 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. ஒரு நாளைக்கு அங்கு இத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டது இதுவே முதல் முறை.
முதலில் கட்டுப்பாடுகள் நாளை மறுதினம் வரை மட்டுமே நடப்பில் இருக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
பிலிப்பீன்ஸில் இதுவரை மொத்தம் 1.93 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 33,008 பேர் மாண்டுவிட்டனர்.