மான்செஸ்டர்: தற்போது உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரராகச் சிலரால் கருதப்படும் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் சேர்ந்துள்ளார்.
தனது பரம வைரி அணியான மான்செஸ்டர் சிட்டி அவரை வாங்கும் எனப் பலர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ரொனால்டோவை வாங்கி காற்பந்து உலகை அதிரவைத்தது யுனைட்டட்.
இதற்கு முன் 2004ஆம் ஆண்டில் தனது 18வது வயதில் யுனைட்டெட்டில் சேர்ந்தார் ரொனால்டோ. அணியில் நட்சத்திர விளையாட்டாளராக உருவெடுத்தார்.
அதன் பின்னர் ரியால் மட்ரிட், யுவென்டஸ் ஆகிய அணிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடினார்.
இப்போது 36 வயது ஆன பிறகும் ஓர் இளையரின் துடிப்புடன் விளையாடிவரும் ரொனால்டோ, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யுனைட்டெட்டில் சேர்ந்து அணியின் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கிரிஸ்டியானோ ரொனால்டோவின் வருகை, மறக்கப்பட்ட நினைவுகளை மீண்டும் மலரச் செய்துள்ளது.

