ஜோகூர் வழி மலேசியா செல்ல புதிய விதிமுறை

ஜோகூர் வழி மலேசியா செல்ல புதிய விதிமுறை

1 mins read
0f352e52-8481-4c73-bb4d-65d80ee59745
செனாய் அனைத்துலக விமான நிலையம்/ஃபேஸ்புக் -

கோலா­லம்­பூர்: ஜோகூர் அனைத்­து­லக முனை­யம் வழியே மலே­சியா செல்­வ­தற்கு ஏழு நாட்­க­ளுக்கு முன், தங்­கள் வீட்­டிலோ வேறொருவரின் வீட்­டிலோ தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள பய­ணி­கள் விண்­ணப்­பிக்­க­வேண்டும். பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் இத­னைத் தெரி­வித்­துள்­ளது.

மேலும், மலே­சி­யா­விற்­குப் புறப்­படு­வ­தற்­குக் குறைந்­தது மூன்று நாட்­க­ளுக்கு முன் பய­ணி­கள் 'ஆர்டி-பிசி­ஆர்' கொவிட்-19 சோத­னையை மேற்­கொள்­ள­வேண்­டும் என்று மலே­சி­யா­வின் சுகா­தா­ரத்­துக்­கான தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­னார்.

பய­ணி­க­ளி­ட­மி­ருந்து கிருமி பர­வு­வ­தற்­கான சாத்­தி­யம், அவர்­களின் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான விண்­ணப்­பத்­தைப் பொறுத்­து கணிக்கப்படும் என்று அவர் சொன்­னார்.

மலே­சி­யா­வில் தங்க தகுந்த இடம் இருக்­க­வேண்­டும், கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படா­ததை 'ஆர்டி-பிசி­ஆர்' சோதனை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும். இத்தகைய நிபந்­த­னை­களைப் பயணிகள் பூர்த்திசெய்யவேண்டும்.

மேலும், ஜோகூர் வழி மலே­சி­யா­விற்­குப் பய­ணம் மேற்­கொள்ள, ஆஸ்ட்­ர­ாசெனெக்கா, ஃபைசர், சினோ­வேக், மொடர்னா, சினோ­ஃபார்ம் ஆகிய தடுப்­பூ­சி­களை இரண்­டா­வது முறை போட்­டுக்­கொண்டு குறைந்­தது 14 நாட்­கள் ஆகி­யி­ருக்­க­வேண்­டும். ஜான்­சன் & ஜான்­சன், கேன்­சினோ போன்ற ஒரு முறை செலுத்­த­வேண்­டிய தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்டால் குறைந்­தது 28 நாட்­கள் ஆகி­யி­ருக்­க­வேண்­டும் எனத் திரு நூர் ஹிஷாம் குறிப்­பிட்­டார்.

இந்த நிபந்­த­னை­க­ளைப் பூர்த்தி­செய்­யாத மலே­சி­யர்­களும் வெளி­நாட்­டுப் பய­ணி­களும், சொந்த செல­வில் அர­சாங்­கம் நிர்­ண­யிக்­கும் நிலை­யங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

அனைத்­து­லக முனை­யத்­திற்கு வந்து சேர்ந்­த­வு­டன் அனைத்து பய­ணி­க­ளுக்­கும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

அதோடு, ஆர்டி-பிசி­ஆர்' சோதனை மறு­ப­டி­யும் மேற்­கொள்ளப்­படும்.