தோக்கியோ: ஆஸ்ட்ராசெனெக்காவின் கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளுடன் சேர்த்துப் போடுவது குறித்து ஜப்பான் ஆலோசித்துவருகிறது.
தடுப்பூசிகளைக் கூடுதலானோருக்கு வேகமாகப் போட இவ்வாறு செய்வது குறித்து யோசிப்பதாக அந்நாட்டின் தடுப்பூசித் திட்டத்துக்கான அமைச்சர் டாரோ கோனோ கூறினார்.
இதற்கிடையே, தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்ட மொடர்னா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட இருவரின் மரணம் குறித்து ஜப்பான் விசாரணை நடத்திவருகிறது.

