'தடுப்பூசி நிலையங்களில் தாக்குதல் சாத்தியம்'

1 mins read
b43e3fdf-ae49-48ed-9db3-6a0ac7a50763
-

சூரிச்: சுவிட்­சர்­லாந்­தின் தடுப்­பூசி நிலை­யங்­கள் உட்­பட கொவிட்-19 தடுப்­பூ­சிக் கட்­ட­மைப்­பைக் குறி­வைத்து பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் நிகழ்த்­தப்­ப­ட­லாம் என்று அந்­நாட்­டின் மத்­திய புல­னாய்­வுச் சேவை எச்­ச­ரித்­துள்­ளது.

சுவிட்­சர்­லாந்­தின் நாளி­தழ் ஒன்று இத­னைத் தெரி­வித்­தது.

பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் தாக்கு­தல்­களை நிகழ்த்­தக்­கூ­டும் என்று புல­னாய்­வுச் சேவை அஞ்சு­வதாக நாளிதழ் குறிப்பிட்டது.

இது­வரை, அத்­த­கைய தாக்குதல்­கள் குறித்து வெளிப்­படை­யான அறி­கு­றி­கள் இல்லை என்றும் சேவை கூறியது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசித் திட்டத்தை அந்நாட்டு ராணுவம் கவனித்துக்கொள்கிறது.