'150 ஆண்டுகளில் வீசாத புயல்'

'150 ஆண்டுகளில் வீசாத புயல்'

1 mins read
4a31d032-f222-4753-8a5f-7ba48485b606
-

நியூ ஒர்­லீன்ஸ்: அமெ­ரிக்­கா­வின் லூசி­யானா மாநி­லத்­தில் ஐடா புயல் வீச­வி­ருப்­ப­தைத் தொடர்ந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ள­னர்.

மணிக்கு 209 கிலோ­மீட்­டர் வேகத்­தில் வீசக்­கூ­டிய ஐடா புயல், 150 ஆண்­டு­களில் அம்­மா­நி­லம் காணாத மோச­மா­ன புய­லாக இருக்கக்­கூ­டும் என்று அதன் ஆளுநர் ஜான் பெல் எட்­வர்ட்ஸ் எச்சரித்­தார்.

ஐடா மிக­வும் மோச­மான, அபாய­க­ர­மான புய­லாக உரு­வெ­டுக்­கிறது என்­றும் உதவி வழங்க மத்திய அர­சாங்­கம் தயா­ராய் உள்­ளது என்றும் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­னார்.

நேற்­றி­லி­ருந்து சரி­யாக 16 ஆண்டு­க­ளுக்கு முன் லூ­சி­யா­னா­வின் ஆகப் பெரிய நக­ரான நியூ ஒர்­லீன்ஸை கத்­ரினா புயல் தாக்­கி­யது. அத­னால் நக­ரின் 80 விழுக்காட்டுப் பகு­தி­களில் வெள்­ளம் ஏற்­பட்­டது, 1,800க்கும் அதி­க­மா­னோர் கொல்­லப்­பட்­ட­னர். அதில் கிடைத்த அனு­ப­வத்­தைக் கொண்டு இம்­முறை நிலை­மையை நன்கு கையா­ள­மு­டி­யும் என்ற நம்­பிக்கை லூசி­யா­னா­வில் உள்­ளது.