கோலாலம்பூர்: மலேசியாவின் 2021ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, பத்தாண்டுகளுக்கு முன்னர் உலக நிதி நெருக்கடியின் போது இருந்ததைப் போன்ற ஒரு நிலைக்குச் செல்லக்கூடும் என்று முதல்முறையாக வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டத்திற்கு முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா நேற்று தனது 64வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நாளில் அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டது.
அதில் இவ்வாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 6.5 விழுக்காடு முதல் 7 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்பு மதிப்பிடப்பட்ட 5.4 விழுக்காட்டைவிட இது அதிகமாகும்.
2008-2009ஆம் ஆண்டில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியின்போது மலேசியாவின் நிதி பற்றாக்குறை 6.7 விழுக்காட்டை எட்டியது.
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக மலேசியாவில் மீண்டும் மீண்டும் முடக்கநிலை கொண்டு வரப்பட்டதால் அதன் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
அங்கு நிலவும் சுகாதார, பொருளாதார நெருக்கடி கடைசியில் அரசாங்க மாற்றத்திற்கு வழி
வகுத்தது.
இதற்கிடையே, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்து
வதற்கும் நிலையான பொருளியல் மீட்பை உறுதி செய்வதற்கும் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.
மலேசியாவின் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் ஜஃப்ருல் அஜீஸ் வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரவுசெலவுத் திட்டம், கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தி யில் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் என்று வரவுசெலவு திட்டத்திற்கு முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

