மான்செஸ்டர்: போர்ச்சுகல் காற்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மீண்டும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கே திரும்பி
உள்ளார்.
யுவெண்டஸ் குழுவிற்காக விளையாடி வந்த இவர் 23 மில்லியன் யூரோவிற்கு (36.6 மில்லியன் வெள்ளி) இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் மேன்யூவில் இணைந்து
உள்ளார். இதற்கு முன்பு 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் மேன்யூ விற்காக விளையாடிய ரொனால்டோ, அப்போது எட்டு கிண்ணங்களை வென்றார்.
யுவெண்டஸ் குழுவில் இருந்து ரொனால்டோ வெளியேறுவதைக் அக்குழு நிர்வாகம் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையே, ரொனால்டோ மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு செல்லக்கூடும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் பரம எதிரியான மான்செஸ்டர் யுனைடெட் குழுவில் அவர் இணைந்துள்ளார்.
வரும் 11ஆம் தேதியன்று ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவுள்ள நியூகாசல் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ மேன்யூ விற்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

