கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 20,000க்கும் குறைவாக 19,378 தொற்றுச் சம்பவங்கள் பதிவானது.
சிலாங்கூரில் மட்டும் ஆக அதிகமாக நேற்று 3,613 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர் என்று டுவிட்டர் பதிவில் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித் தார்.
சிலாங்கூருக்கு அடுத்ததாக சரவாக்(2,464), சாபாவில் (2,404) அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
ஜோகூரில் 2,331 சம்பவங்களும் பினாங்கில் 1,470 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே கிருமித்தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாததால் அதனுடன் சேர்ந்து வாழ மக்களை அரசாங்கம் ஆயத்தப்படுத்தி வருகிறது.
முடிவில்லா கொவிட்-19 கிருமியுடன் வாழப் பழக வேண்டும் என்று மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
மலேசியாவில் நேற்று வரை 47.2 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர் என்று பெர்னாமா தகவல் தெரிவிக்கிறது.
நாட்டின் ஒட்டுெமாத்த மக்கள்தொகையில் 47.2 விழுக்காடு அல்லது 15,429,300 தனிப்பட்டவர் களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளதை கொவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவின் (ஜேகேஜேஏவி) புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தடுப்பூசி நிலவரத்தைக் காட்டும் குழுவின் வரைபடம் நேற்று டுவிட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஏறக்குறைய 20,115,233 தனிப்பட்டவர்கள், அதாவது 61.6 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டுள்ளதை அந்த வரைபடம் காட்டியது.
கொவிட்-19 தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 35,519,754க்கு அதிகரித்துள்ளது.
ஜேகேஜேஏவி புள்ளி விவ ரங்களின்படி இரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கையும் 65.1லிருந்து 65.9 விழுக்காட்டுக்கு கூடியுள்ளது.

