கட்டுப்பாடுகளைத் தளர்த்த நியூசிலாந்து முடிவு

கட்டுப்பாடுகளைத் தளர்த்த நியூசிலாந்து முடிவு

1 mins read
e4b995e9-51b4-4d32-853c-15448283be14
-

வெலிங்­டன்: நேற்­றைய நில­வ­ரப்­படி நியூ­சி­லாந்­தில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், நாட்­டின் பெரும்­பா­லான பகு­தி­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த நியூ­சி­லாந்து திட்­ட­மிட்­டுள்­ளது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோர் அனை­வ­ரும் ஆக்­லாந்­தில் உள்­ள­னர்.

ஆக அண்­மைய கிரு­மிப் பர­வ­லின் கார­ண­மாக அந்­நக­ரத்­தில் மொத்­தம் 821 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக நியூ­சி­லாந்து சுகா­தார அமைச்சு கூறி­யது.

இன்று நள்­ளி­ர­வி­லி­ருந்து ஆக்­லாந்­துக்கு வெளியே உள்ள மற்ற இடங்­களில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை நியூ­சி­லாந்து தளர்த்த இருக்­கிறது. இந்­தத் தக­வலை அந்­நாட்­டுப் பிர­த­மர் ஜெசின்டா ஆர்­டன் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இதன்­படி, சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டித்து பள்­ளி­கள், அலு­வ­ல­க­ங்கள், வர்த்­த­கங்­கள் இயங்­க­லாம் என்று அவர் கூறி­னார்.