பினாங்கு: மாடு மேய்த்து தொழில் நடத்தி வந்த எம்.கிருபாகரன் (29), போதைப்பொருள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் 40 வயது மாது ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டையும் நேற்று ஒப்புக்கொண்டார்.
மலேசியாவின் சுங்கை ஜாவி பகுதியில் அமைந்துள்ள லீ லிங் டீ என்ற மாதின் வீட்டுக்குள் கடந்த மாதம் 28ஆம் தேதியன்று அதிகாலை 3 மணியளவில் அத்துமீறிச் சென்ற கிருபாகரன், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன் அசையாமல் இருந்த அவரது உடலைக் கட்டிலுக்கு அடியில் மறைத்தும் வைத்ததாக நம்பப்படுகிறது. பின்னர், வீட்டிலிருந்து கைபேசி, ரொக்கம், பெண்ணின் நகை ஆகியவற்றையும் ஆடவர் களவாடியதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டை நேற்று வாசித்தபோது, நிதானமாகக் காணப்பட்ட கிருபாகரன் அதைப் புரிந்துகொண்டதாக தலையசைத்தார்.

