மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவை அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளனர்.
தற்போதைய கொவிட்-19 கட்டுப் பாடுகள் செம்டம்பர் 15ஆம் ேததி வரை நீடிக்கும் என்று அதிபர் மாளிகை பேச்சாளர் ஹேரி ரோக் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதையடுத்து பிலிப்பீன்ஸ் பொருளியலில் மூன்றில் ஒரு பங்கை வகிக்கும் மணிலா நகரம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடக்கப்பட்டுள்ளது.
இதனை மாற்றியமைக்கப்பட்ட சமூக தனிமைப்படுத்துதல் என்று திரு ரோக் குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்களில் உணவை வாங்கிச் ெசல்ல மட்டும் அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
நோய்க் கிருமி பரவும் குழுமங்களை இலக்காகக் கொண்ட முன்னோடி கொவிட்-19 கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படுவதாக அதிபர் மாளிகை அறிக்கை குறிப்பிட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
நாட்டின் பொருளியலுக்கு முக்கிய நகரமான மணிலா முடங்கியிருப்பதால் 74 பில்லியன் பெசோ (S$2 பில்லியன்) இழப்பீடு ஏற்படும் என்று பொருளியல் திட்ட செயலாளர் கார் சுவா தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2023 முற்பகுதியில் கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிலிப்பீன்சில் தினசரி தொற்றுச் சம்பவங்களும் தொடர்ந்து அதி கரித்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2.1 மில்லியன் பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான கட்டுப் பாடுகளால் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே பிலிப்பீன்ஸ் நாணயம் தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் பலவீனமடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான பரிவர்த்தனையில் அந்த நாணயத்தின் மதிப்பு நேற்று 0.3 விழுக்காடு சரிந்தது.