செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்; மேலும் இருவர் அடையாளம் தெரிந்தது

1 mins read
de25d9d1-15d3-45f3-aec2-572d03194b21
2001 செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் இரட்டைக் கோபுரம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய சிங்கப்பூரரான ரேச்சல் யாகெர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நியூ­யார்க்: நியூ­யார்க்­கில் நடந்த செப்­டம்­பர் 11 பயங்­க­ர­வா­தத் தாக்­கு­ த­லில் கொல்­லப்­பட்ட மேலும் இரு­வ­ரின் அடை­யா­ளம் கண்­டு­பி­டிக்கப்­பட்­டுள்­ளது. அந்­தத் தாக்­கு­த­லின் 20வது ஆண்டு நிறைவு சில நாட்­களில் வரும் வேளை­யில் இந்­தத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

நியூ­யார்க்­கில் இருந்த இரட்­டைக் கோபு­ரத்தை அல்­காய்தா பயங்­க­ர­வாத அமைப்பு கடத்­தப்­பட்ட விமா­னங்­களை மோதி தகர்த்­தது. இதில் 2,753 பேர் கொல்­லப்­பட்­ட­னர். இந்­நி­லை­யில் உயி­ரி­ழந்த 1,646வது மற்­றும் 1,647வது நபர்­க­ளின் எச்­சங்­கள் மர­பணு தொழில்­நுட்­பத்­தின் மூலம் ஆராயப்பட்டு அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தாக நியூ­யார்க் நகர தலைமை மருத்­துவ பரி­சோ­த­கர் அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

"எவ்­வ­ளவு நாட்­கள் ஆனா­லும் உலக வர்த்­தக நிலை­யத் தாக்­கு ­த­லில் பலி­யான உங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளின் அடை­யா­ளத்­தைக் கண்டுபிடிப்­போம் என்று இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்பு குடும்­பத்­தி­ன­ரி­டம் உறுதி கூறி­யி­ருந்­தோம். அதன்­படி மேலும் இரு­வ­ரின் அடை­யா­ளத்­தைக் கண்­டு­பி­டித்­துள்­ளோம். இந்­தப் புனி­த­மான பணியைத் தொடர்ந்து செய்­வோம்," என்று தலைமை மருத்­துவ பரி­சோ­த­கர் பார்­பரா சாம்­சன் அறிக்­கை­யில் கூறி­யி­ருந்­தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 1,106 பேர் அல்லது 40 விழுக்காட்டினர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.