நியூயார்க்: செப்டம்பர் 11 தாக்கு
தலின் 20ஆம் ஆண்டு நினைவஞ்சலியை அமெரிக்கா நேற்று அனு
சரித்தது.
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரசித்திபெற்ற இரட்டை கோபுரங்
களைப் பயங்கரவாதிகள் தகர்த்தனர். தாக்குதல் காரணமாக ஏறத்தாழ 3,000 பேர் மாண்டனர்.
தாக்குதலில் மாண்டோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
இவ்வாண்டின் நினைவஞ்சலி கூடுதல் உணர்வுபூர்வமாக இருந்தது. அண்மையில், ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் மீண்டும் கைப்பற்றியதே இதற்குக் காரணம். இரட்டை கோபுரம் தகர்த்தப்பட்ட போது ஆப்கானிஸ்தான் தலிபான் வசம் இருந்தது. தாக்குதலுக்குப் பிறகு, அதற்குக் காரணமாக இருந்த ஆல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கும் ஒசாமா பின் லேடனுக்கும் தலிபான் அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறி அமெரிக்கா படையெடுத்தது.
அதன் விளைவாக தலிபானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானி
லிருந்து அமெரிக்கப் படைகள் அண்மையில் வெளியேறியதும் மின்னல் வேகத்தில் தலிபான் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலில்
உயிரிழந்தோரின் அன்புக்குரியவர்களை இது ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டார். அதுவே அமெரிக்கர்களின் பலம் என்றார் அவர். தாக்குதல் நடத்தப்பட்ட ஒவ்வோர் இடத்துக்கும் நேரில் சென்று மாண்டோருக்கு அதிபர் பைடன் மரியாதை செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மாண்டோரின் பெயர்களை அவர்
களது உறவினர்கள் வாசித்தனர்.
இரட்டை கோபுரங்கள் மீது விமானங்கள் மோதியது, கோபுரங்கள் இடிந்து விழுந்தது, தற்காப்பு அமைச்சின் கட்டடம் தாக்கப்பட்டது, 'ஃபிளைட் 93' விழுந்து நொறுங்கியது ஆகியவற்றை அனுசரிக்கும் வகையில் ஆறு முறை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. "இருபது ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் அதிர்ச்சி அலைகள் தொடர்ந்து இன்னமும் பல இடங்களிலும் எதிரொலிக்கின்றன. சிங்கப்பூரர்கள் விழிப்புநிலையைத் தளரவிட்டு விடக்கூடாது, சமூகப் பிணைப்பைக் கிள்ளுக்கீரையாகக் கருதக்கூடாது," என்று, தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவைக் குறிக்கும் வகையில் வெளியிட்ட செய்தியில் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திஉள்ளார்.

