சீர்திருத்தத் திட்டங்களை வரவேற்ற மலேசிய எதிர்க்கட்சியினர்

2 mins read
8cc16b31-16c4-4cec-98b5-f21c7e4e4d99
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் முன்­வைத்­துள்ள சீர்­தி­ருத்­தத் திட்­டங்­களை அந்­நாட்­டின் எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்வார்

இப்­ரா­கிம் வர­வேற்­றுள்­ளார்.

"நாடா­ளு­மன்ற, அர­சாங்க நிர்­வா­கத்தை மேம்­ப­டுத்த அர­சாங்­கம் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களை நான் வர­வேற்­கி­றேன்.

"கடந்த மாதம் 25ஆம் தேதி­யன்று நானும் சக பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணித் தலை­வர்­களும் பிர­த­மர் இஸ்­மா­யி­லைச் சந்­தித்­துப் பேசி­னோம்.

"அத­னைத் தொடர்ந்து இப்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கி­றோம். இது ஒரு நல்ல தொடக்­கம். இருப்­பி­னும், கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை முறி­

ய­டிக்­க­வும் மக்­க­ளின் உயி­ரைக் காக்­க­வும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யி­லி­ருந்து மலே­சி­யர்­க­ளைக் காப்­பாற்­ற­வும் பொது­வான ஒரு தளத்தை அமைப்­பது குறித்து கலந்­து­ரை­யா­டல்­கள் தொடர்­கின்­றன," என்று கெஅ­டி­லான் கட்­சித் தலை­வ­ரான திரு அன்­வார் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

முக்­கி­ய­மான சீர்­தி­ருத்­தத் திட்­டங்­

க­ளைத் தாம் முன்­வைப்­ப­தா­க­வும் அதற்­குப் பதி­லாக எதிர்க்­கட்­சி­யி­னர் தமக்கு ஆத­ரவு அளிக்க வேண்­டும் என்­றும் திரு இஸ்­மா­யில் நேற்று முன்­தி­னம்

கேட்­டுக்­கொண்­டார்.

பிர­த­ம­ரின் பத­விக்­கா­லத்துக்குப் பத்து ஆண்­டு­க­ள் வரம்பு விதிப்பது, அமைச்­சர்­க­ளுக்கு இணை­யாக எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்­கும் அதே அள­வி­லான சம்­ப­ளம், வளங்­கள் ஆகி­ய­வற்றை வழங்­கு­வது, நாடா­ளு­மன்­றத் தேர்­வுக் குழுக்­களில் 50 விழுக்­காட்­டி­னர் ஆளுங்­

கட்­சி­யி­ன­ரை­யும் 50 விழுக்­காட்­டி­னர் எதிர்­க்கட்­சி­யி­ன­ரை­யும் நிய­மிப்­பது, தேசிய மீட்சி மன்­றத்­தில் எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­வது, வாக்­கா­ளர்­க­ளின் குறைந்­த­பட்ச வயதை 18ஆகக் குறைப்­பது முத­லி­யவை பிர­த­மர் இஸ்­மா­யில் தந்துள்ள வாக்­கு­று­தி­களில் அடங்­கும்.

திரு இஸ்­மா­யில் முன்­வைத்­துள்ள திட்­டங்­களை வர­வேற்­றபோ­தி­லும் நாளை நாடா­ளு­மன்­றம் கூடும்­போது பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­பதை அவர் உறுதி செய்ய வேண்­டும் என்­றார் திரு அன்­வார்.

திரு இஸ்மாயிலுக்குத் தற்போது நூலிழைப் பெரும்பான்மை மட்டுமே உள்ளது.