நசரத்: இஸ்ரேலில் உள்ள உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து தப்பித்த சிறைக் கைதிகளில் இருவரை இஸ்ரேலிய போலிசார் நேற்று கைது செய்தனர்.
அரபுக் கிராமம் ஒன்றில் லாரிகள் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் இருவரும் ஒளிந்துகொண்டிருந்தனர். இதற்கு முன்பு மேலும் இரு கைதிகள் சிக்கினர்.
இன்னும் இரண்டு பேரை இஸ்ரேலிய அதிகாரிகள் வலை வீசித் தேடுகின்றனர்.

