கொவிட்-19: திணறும் பிலிப்பீன்ஸ் மருத்துவமனைகள்

கொவிட்-19: திணறும் பிலிப்பீன்ஸ் மருத்துவமனைகள்

1 mins read
b75fd88f-c1ee-4333-8a58-c6fe52820d59
-

மணிலா: பிலிப்­பீன்­சில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு நேற்று மேலும் 26,303 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்­டோர் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் கொரோனா நோயா­ளி­கள் சிகிச்சை பெறும் வார்­டு­க­ளைத் தற்­கா­லி­க­மாக மூட மேலும் இரண்டு மருத்­து­வ­ம­னை­கள் முடி­வெ­டுத்­துள்­ளன.

இவ்­விரு மருத்­து­வ­ம­னை­களும் தலை­ந­கர் மணி­லா­வுக்கு தென்­கி­ழக்­கில் உள்ள கியூ­சோன் மாநி­லத்­தில் உள்­ளன.

கொவிட்-19 நோயா­ளி­

க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள அறை­களில் இனி இடம் இல்லை என்று அந்த இரண்டு அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களும் தெரி­வித்­தன.

நேற்றைய நிலவரப்படி பிலிப்பீன்சில் கொவிட்-19 காரணமாக மேலும் 79 பேர் மாண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.