சூறாவளி; தைவானில் ரயில் சேவை ரத்து, மின்சாரத் தடை

சூறாவளி; தைவானில் ரயில் சேவை ரத்து, மின்சாரத் தடை

1 mins read
5d88074f-74bf-4c3e-9b66-13081ad15e50
-

தைப்பே: பலத்த காற்று, கன­மழை என சாந்து சூறா­வளி பிலிப்­பீன்­சை­யும் தைவா­னை­யும் புரட்­டிப் போட்­டுள்­ளது.

சூறாவளி காரணமாக தைவா­னில் ரயில், விமான, படகுப் போக்­கு­வ­ரத்து சேவை­ரத்து செய்­யப்

­பட்­டன. சுமார் 26,000 வீடு­க­ளுக்கு மின்­சார சேவை தடை­பட்­டுள்­ளது.

சென்ற வார­ம் மிகவேக­மாக உரு­வான சாந்து புயல் முத­லில் கடும் அபா­ய­மிக்­க­தாக வகைப்­

ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. பின்­னர் அது வேகம் குறைந்த சூறா­வ­ளி­யாக அறி­விக்­கப்­பட்­டது.

இருந்தாலும் தைவானின் கிழக்குப் பகுதிகளில் இதுவரை 200 மி.மீ. மழை பதிவானதாகவும் 7 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

சாந்து புயல் கார­ண­மாக பிலிப்பீன்சின் வடக்கு தீவு­களில் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாது­காப்­பான இடங்­க­ளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.