காபூல்: ஆப்கானிஸ்தானைக் கடந்த மாதம் தலிபான்கள் கைப்பற்றி பின்னர் முதன் முறையாக அங்கு அனைத்துலக வர்த்தக விமானச் சேவைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
இஸ்லாமாபாத்திலிருந்து சென்ற பாகிஸ்தானிய அனைத்துலக விமானச் சேவை விமானம், நேற்று காலை காபூலில் தரை இறங்கியது. பின்னர் அந்த விமானம் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் இஸ்லாமாபாத் திரும்பியது.
விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள், உலக வங்கி போன்ற அனைத்துலக அமைப்புகளில் பணிபுரியும் ஆப்கானியர் களின் குடும்பத்தார் என்று விமான நிலைய ஊழியர்கள் கூறினர். அமெரிக்கப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறியபோது அடித்து நொறுக்கப்பட்ட காபூல் விமான நிலையத்தை கத்தாரின் உதவியுடன் தலிபான்கள் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எதிநோக்கும் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க 600 மில்லியன் டாலர் நிதி தேவை என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.

