மணிலா: பிலிப்பீன்சில் நேற்று மீண்டும் கல்வியாண்டு தொடங்கியபோதும், வகுப்பறைகளில் ஆளில்லை. பிலிப்பீன்ஸ் இரண்டாவது ஆண்டாக இணையம் வழியாக வகுப்புகளை நடத்தவுள்ளது. இது அங்கு கல்வி நெருக்கடியை மோசமாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தை அதிபர் ரொட்ரிகோ டுடார்ட்டே ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
பள்ளிகளை மீண்டும் திறக்கக்கூறி மாணவர்கள் நேற்று மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

