டென்பசார்: இந்தோனீசியாவின் பாலித் தீவில் நேற்று முன்தினம் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, சுற்றுப்
பயணிகளின் வருகையை அத்
தீவின் சுற்றுப்பயணத்துறை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கிறது.
இனி, சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று பாலியின் சுற்றுப்பயணத்துறை நம்பிக்கை தெரிவித்தது.
பாலித் தீவுக்கு வெளிநாட்டவர்கள் செல்ல தேவையான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
பிரபல சுற்றுலாத் தலமான பாலி, கொவிட்-19 நெருக்கடி
நிலையால் முடங்கியது.
அங்குள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.
பாலித் தீவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் உச்சத்தைத் தொட்டது. அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக பாலியை சுற்றுப்பயணிகளுக்கு மீண்டும் திறந்துவிட இந்தோனீசிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
பாலியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அங்குள்ள சுற்றுலாத் தலங்களிலும் திரையரங்குகளிலும் 50 விழுக்காடு வருகையாளர்களை மட்டும் கொண்டு இயங்க
இந்தோனீசியா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே, தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தோனீசியா விரைவுபடுத்துகிறது.