கொவிட்-19: சிட்னியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

கொவிட்-19: சிட்னியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

2 mins read
d20b5f52-da53-4bdd-b95d-c12daf02c540
-

சிட்னி: கொரோனா கிருமி பாதிப்பு அதி­கம் காணப்­பட்ட பகு­தி­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ஊர­டங்கை சிட்னி அதி­கா­ரி­கள் தளர்த்­தி­யுள்­ள­னர். கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை நிலை­யாகி வரு­வ­து­டன் தடுப்­பூசி விகி­த­மும் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், இத்­த­ளர்வு அறி­விக்­கப்­பட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆகப் பெரிய நக­ரான சிட்னி, கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­க­ளாக முடக்­க­நி­லை­யில் இருந்­தது.

முன்­ன­தாக, கிருமி அதி­கம் பர­வி­யி­ருந்த பகு­தி­களில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை­யி­லான ஊர­டங்கு நட­வடிக்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. அதை­ய­டுத்து, நேற்­று­மு­தல் அது தளர்த்­தப்­ப­டு­வ­தாக நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் முதல்­வர் கிளா­டிஸ் பெரி­ஜக்­கி­லி­யான் அறி­வித்­தார்.

நீண்­ட­கால முடக்­க­நிலை ஒரு முடி­வுக்கு வரு­வ­தற்­கான தொடக்­கம் இது என்று சிட்­னி­வா­சி­கள் இத்­த­ளர்­வைக் கரு­து­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, தொற்று விகி­தம் நாள் ஒன்­றுக்கு ஏறத்­தாழ 1,300ல் உள்­ளது. அத்­து­டன் சிட்னி மக்­களில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஒரு தடுப்­பூ­சி­யா­வது போடப்­பட்டு­விட்­டது.

கடந்த சில நாட்­க­ளாக ஒரு நிலைத்­தன்­மையை தொற்று எண்­ணிக்­கை­யில் பார்க்க முடி­வ­தா­கக் கூறிய மாநில முதல்­வர் பெரி­ஜக்­கி­லி­யான், மக்­கள் தொடர்ந்து விழிப்­பு­டன் இருந்து வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை மீறா­மல் இருக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

பெரும்­பா­லான சிட்­னி­வா­சி­கள் உணவு வாங்­க­வும் வெளிப்­பு­ற உடற்­ப­யிற்சி செய்­ய­வும் மருத்­துவ சிகிச்சை நாட­வும் மட்­டுமே தங்­களின் இல்­லங்­களை விட்டு வெளி­யேற முடி­யும். பள்­ளி­கள், மதுக்­கூ­டங்­கள், உண­வ­கங்­கள், அலு­வ­ல­கங்­கள் ஆகி­யவை ஜூன் முதல் மூடப்­பட்­டுள்­ளன. மேலும், தங்­க­ளின் வீட்­டி­லி­ருந்து ஐந்து கிலோ­மீட்­ட­ருக்கு மேல் பய­ணம் செய்­ய­வும் சிட்­னி­வா­சி­க­ளுக்கு அனு­மதி இல்லை.

இதற்­கி­டையே விக்­டோ­ரியா மாநி­லத்­தில் பதி­வா­கிய புதிய கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை, இரண்­டா­வது நாளாக நேற்று குறைந்­தி­ருந்­தது. முதல் தடுப்­பூ­சியை விக்­டோ­ரியா மக்­கள் போட்­டுக்­கொண்­டுள்ள விகி­தம் 68% ஆகும். உரு­மா­றிய டெல்டா கிருமி பரவி வந்­த­தால் அங்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளை­யும் மாநி­லம் தளர்த்­த­வுள்­ளது.

விக்­டோ­ரி­யா­வில் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெற்­றுள்ள பெரி­ய­வர்­களில் குறைந்­தது 70 விழுக்­காட்டி­னர் தங்­க­ளின் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்ற இலக்கை விக்­டோ­ரியா கூடிய விரை­வில் அடைந்­து­வி­டும் என்று கூறப்படுகிறது.