'தடுப்பூசி போடாததால் ஏற்படும் நெருக்கடி வேண்டாம்'

'தடுப்பூசி போடாததால் ஏற்படும் நெருக்கடி வேண்டாம்'

1 mins read
db231042-a2e9-4db3-a8ed-44db510d282f
-

ஸ்ட்­ராஸ்­பர்க்: கொவிட்-19க்கு எதி­ரா­கப் போடப்­படும் தடுப்­பூ­சிப் பணி, துரி­த­மாக்­கப்­பட வேண்­டும். அப்­போ­து­தான் 'தடுப்­பூசி போடாத­தால் ஏற்­படும் நெருக்­கடி' நிலை­யைத் தவிர்க்­க­லாம் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் தலைமை நிர்­வாகி எர்­சிலா வொன் டெர் லெயென் கூறி­யுள்­ளார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய், அதி­வே­கப் பொரு­ளி­யல் வீழ்ச்சி, 'பிரெக்­சிட்' தந்த அழுத்­தங்­கள் போன்ற வெவ்­வேறு விவ­கா­ரங்­களால் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் அடங்­கும் நாடு­க­ளின் மீள்­தி­றன், கடந்த பல மாதங்­க­ளாக சோத­னைக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், 27 நாடு­களை உள்­ள­டக்­கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில், கொவிட்-19 தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெற்ற பெரி­ய­வர்­கள் 70 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஆகஸ்ட் இறுதி நில­வ­ரப்­படி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­ட­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

மேலும், 19 ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­கள் அவற்­றின் கொள்­ளை­நோய்க்கு முந்­தைய பொரு­ளி­யலை இவ்­வாண்டு மீண்­டும் பெறும் என்று அவர் தெரிவித்தார்.