மலேசிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தொடங்கப்பட்ட மனு

மலேசிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தொடங்கப்பட்ட மனு

1 mins read
700cc006-a1ce-42d4-8e0b-f9a7de15beba
-

பெட்­டா­லிங் ஜெயா: வெளி­நாட்­டில் மலே­சிய தாய்­மார்­க­ளுக்­குப் பிறந்த குழந்­தை­க­ளுக்கு மலே­சிய குடி­யு­ரிமை வழங்­கப்­படும் என்று கோலா­லம்­பூர் நீதி­மன்­றம் கடந்த வாரம் அறி­வித்­தி­ருந்­தது, வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க ஒரு தீர்ப்­பா­கக் கரு­தப்­பட்­டது. இருப்­பி­னும், இதற்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் வகை­யில் மலே­சிய அர­சாங்­கம் திங்­கட்­கி­ழ­மை­யன்று உயர் நீதி­மன்­றத்­தில் அதன் மேல்­மு­றை­யீட்­டைச் சமர்ப்­பித்­தது.

இதை­ய­டுத்து, சிவில் சமூக அமைப்­பு­கள் அர­சாங்­கத்­தின் செயல்­பாட்டை சாடி வரு­கின்­றன.

மேல்­மு­றை­யீட்டை அர­சாங்­கம் மீட்­டுக்­கொள்­ளு­மாறு தொடங்­கப்­பட்ட மனு­வில் ஒரே நாளில் 10,000 பேர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மலே­சிய தாய்­மார்­க­ளின் நிலை­யைத் தாம் அறிந்­தி­ருப்­ப­தா­க­வும் இந்த விவ­கா­ரம் குறித்­துச் சட்­ட­ச­பை­யில் பேச­விருப்­ப­தா­க­வும் சட்ட அமைச்­சர் வான் ஜுனாய்டி வான் ஜாஃபர் கூறி­யுள்­ளார்.

தந்தை மலே­சி­ய­ராக இருந்து, அவ­ருக்கு வெளி­நாட்­டில் குழந்தை பிறந்­தால், அதற்­குத் தானா­கவே மலே­சிய குடி­யு­ரிமை வழங்­கப்­படும்.