வாஷிங்டன்: இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு, ராணுவ நடமாட்டம் குறித்து பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன.
இந்நிலையில், அந்நாடுகளுக்கு இடையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அவை அறிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் காணொளி வழியாக ஆக்சஸ் எனும் முத்தரப்பு கூட்டு திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் குறித்து நேற்று அறிவித்தனர்.
இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு அணுவாயுத சக்திக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் கிடைப்பதற்கு, அமெரிக்கா உதவ முன்வந்து
உள்ளது.
இணையத் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், கடலுக்கு அடியில் கூடுதல் திறன் ஆகியவற்றிலும் இந்த
ஒப்பந்தம் கவனம் செலுத்தும் என்றும் ஒப்பந்தம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் படைத் திறனை மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரு வதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கம் என்றும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில், குறிப்பாக சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் ராணுவ நடமாட்டத்தைக் கண்
காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையிலும் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த ஒப்பந்தம் சீனாவை இலக்காகக் கொண்டதல்ல என்று அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரிகள் வலியுறுத்தி கூறினர்.
அதேசமயம் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதியை நிலைநிறுத்துவதும் பாதுகாப்பை உறுதி செய்வதுமே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த ஒப்பந்தத்தால் சீனா மட்டுமல்லாமல், பிரான்சும் பாதிக்கப் படும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், ஆஸ்திரேலிய கடற்
படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்
களைத் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் சுமார் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.
ஆனால் அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்காக, பிரான்சுடனான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருக்கிறது.

