பாரிஸ்: பிரான்ஸ் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அத்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கிரேட்டர் சகாராவில், கடந்த 2015ல் ஐஎஸ் அமைப்பை நிறுவிய அவர், மாலி, நைஜர், பர்கினா பாசோ வில் நடந்த தீவிரவாத தாக்கு தலுக்கும் மூளையாக செயல் பட்டுள்ளார். இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு
5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

